1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: ஞாயிறு, 30 ஏப்ரல் 2017 (14:06 IST)

மற்றவர்களுக்காக நான் வாழ முடியாது: நடிகை யாமி கவுதம் பேச்சு!

தமிழில் கவுரவம், தமிழ் செலவனும் தனியார் அஞ்சலும் ஆகிய படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை யாமி கவுதம். தற்போது சிவப்பழகு கிரீம் தொடர்பான விளம்பரத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில், யாமி கவுதம், ஷாருக்கான், தீபிகா படுகோன், சோனம் கபூர், ஷாகித் கபூர், ஜான் ஆப்ரகாம் ஆகிய நடிகர், நடிகைகளை நடிகர் அபய் தியோல் கடுமையாக சாடியிருந்தார்.


 
இது குறித்து யாமி கவுதமிடம் கேட்டபோது எனது வாழ்க்கையை நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன், மற்றவர்களுக்காக நான் வாழ முடியாது அதோடு எனக்கு சுயமாக சிந்திக்கும் அறிவு இருக்கிறது. நான் எதில் நடிக்க வேண்டும், எதில் நடிக்க கூடாது என்ற முடிவை நான் மட்டுமே எடுக்க முடியும் என்று கூறினார்.