1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 25 மே 2017 (22:16 IST)

என் மனைவிக்கு விருப்பம்ன்னா ஜெயிலுக்கு போகவும் தயார்: தாடி பாலாஜி

ஒற்றுமையாக இருந்த தாடி பாலாஜி குடும்பத்தின் மேல் யார் கண் பட்டதோ தெரியவில்லை, திடீரென கணவர் பாலாஜி மீது வன்கொடுமை புகார் கொடுத்தார் நித்யா. அதுமட்டுமின்றி உன்னை ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாட்டேன்' என்றும் சவால் விடுகிறாராம். இந்த நிலையில் பாலாஜி மிகவும் மனம் நொந்து என் மனைவி விரும்பினால் ஜெயிலுக்கு போகவும் தயார் என்று கூறியுள்ளார்.



 


எங்கள் இருவருக்கும் ஏற்பட்டது அனைத்து கணவன், மனைவிக்கும் ஏற்பட்ட ஒரு சிறிய பிரச்சனைதான். அதுகுறித்து என் மனைவி அரைமணிநேரம் தனியாக இருந்து யோசித்தால் எல்லா பிரச்னைக்கு முடிவு கிடைத்துவிடும்.  என் மனைவியுடன் இருப்பவர்கள் பணத்துக்காக அவருடன் இருக்கிறார்கள். அவர்கள் அவருக்குத் தவறான வழியைக்காட்டுகின்றனர்.

நூறுசதவிகிதம் என் மனைவியை பார்த்துக் கொண்டதைவிட என் குழந்தையைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். சூட்டிங் ஸ்பார்ட்டில் கூட குழந்தையை மடியில் வைத்து கொண்டு உணவு ஊட்டுவேன். அது எல்லோருக்கும் தெரியும். என் மனைவி பேசியதை அமைதியாக கேட்டுக் கொண்டு இருப்பதற்கு காரணம் என் குழந்தையே. என்றுமே என் மனைவியைக் குறித்து குறை சொல்லமாட்டேன்.

முதல் மனைவியை விவகாரத்து செய்தபிறகே நித்யாவை திருமணம் செய்தேன். எல்லாமும் அவருக்குத் தெரியும். என்னை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து, ஜெயிலில் அடைக்க வேண்டும் என்பதே என் மனைவி தரப்பினரின் குறிக்கோளாக உள்ளது. என் மனைவி ஆசைப்பட்டால் அவருக்காக ஜெயிலுக்கு போகவும் நான் தயார். அதற்கு முன்பு என் மனைவி கடந்த கால வாழ்க்கையை கொஞ்சம் நினைத்துப்பார்க்க வேண்டும்" என்றார் கண்ணீர் மல்க.