வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 28 நவம்பர் 2016 (16:08 IST)

முன்னாள் காதலியின் கணவர் மீது பொறாமை! - இயக்குநர் பேரரசு மனம் திறந்த பேச்சு

முன்னாள் காதலியின் கணவர் மீதும், இளையராஜாவின் இசையில் படம் இயக்கும் இயக்குநர்கள் மீதுதான் தனக்கு பொறாமை என்று இயக்குநர் பேரரசு கூறியுள்ளார்.


 
இயக்குநர் பேரரசு மற்றும் நடிகை தன்ஷிகா..
 
எம்.கே.பிலிம்ஸ் சார்பில் சி.முத்துகிருஷ்ணன் தயாரித்துள்ள படம் ‘ராணி’. சாய் தன்ஷிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை சமுத்திரகனியின் இணை இயக்குனர் எஸ். பாணி இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் இளையராஜா, சாய் தன்ஷிகா, இயக்குநர் பாணி, தயாரிப்பாளர் முத்து கிருஷ்ணன், இயக்குநர் சமுத்திரகனி, இயக்குநர் கரு.பழனியப்பன், இயக்குநர் பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பேரரசு, “நாம் எல்லோரும் பயணத்தில் கேட்கும் பாடல்கள் அனைத்தும் இசை  ஞானி இளையராஜா அவர்களுடைய பாடல்கள் தான். அவருடைய பாடல்களை கேட்டால் 2,000 கிலோ மீட்டர் தாண்டி கூட பயணித்துக்கொண்டே இருக்கலாம்.

இந்த, “ராணி” படத்தின் அனைத்து பாடல்களும் மனதை கவரும்  வகையில் உள்ளது. இப்படிப்பட்ட சிறந்த பாடல்களை இசைஞானி இளையராஜா அவர்களால் தான் உருவாக்க முடியும்.

என் வாழ்நாளில் இரண்டே இரண்டு பேரை பார்த்து தான்  பொறாமை படுகிறேன். ஒருவர் என்னுடைய முன்னாள் காதலியின் கணவர். அடுத்து, இசைஞானி இளையராஜாவின் இசையில் படம் இயக்கும் இயக்குநர்கள் மீது பொறாமை உண்டு. அந்த விதத்தில் “ராணி” படத்தின் எனக்கு இயக்குநர் பாணி மீது மிகப்பெரிய பொறமை உண்டு.

நான் இசைஞானி இளையராஜா அவர்களை கவரும் வகையில்  கதையை தயார் செய்து நிச்சயம் அவருடைய இசையில் ஒரு படத்தை இயக்குவேன்.

என்றென்றும் உலகத்தில் ஒரே ஒரு இளையராஜா தான். ஆயிரம் யுவன் ஷங்கர் ராஜாக்கள் வந்தாலும் ஒரு இசை ஞானி இளையராஜாவை மிஞ்ச முடியாது என்பது தான் உண்மை” என்று கூறினார்.