1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 22 ஜனவரி 2019 (12:33 IST)

கைமாறிய சூர்யா – ஹரிப் படம் ! – பின்னணி என்ன ?

சூர்யா மற்றும் ஹரியின் கூட்டணியில் சன்பிக்சர்ஸ் தயாரிக்க இருந்த படம் இப்போது ஏ.வி,எம். நிறுவனத்திற்கு சென்றுள்ளது.

சூர்யா- ஹாரி காம்போவில் உருவான ஆறு, சிங்கம் பட வரிசைகள் அனைத்தும் தயாரிப்பாளர்களுக்க்கும் லாபம் கொடுத்தவை. மேலும் சூரியாவின் திரை வாழ்வில் திருப்புமுனையாக அமைந்து அவரது மார்க்கெட்டை விரிவாக்கியவை. அதனால் சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் மற்றுமொருப் படத்தை உருவாக்க சன்பிக்சர்ஸ் முயன்றது.

சூர்யாவும் ஹரியும் இதற்கு ஒத்துக்கொள்ள அந்த படம் சிங்கம் பட வரிசையின் நான்காவது பாகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது திடீரென சூர்யா- ஹரியின் அடுத்தப் படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்குக் காரணம் என்னெவென்றால் ‘சன் பிக்சர்ஸ் டீமுக்கு இயக்குனர் ஹரி சொன்ன கதையில் திருப்தி இல்லாததால் வேறு கதை தயார் செய்ய சொல்லி இருக்கிறார்கள். ஆனால் சூர்யாவுக்கும் ஹரிக்கும் அந்த கதையேப் பிடித்துப் போக இப்போது ஏவிஎம் நிறுவனம் அந்த படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளது. இப்படத்துற்கு யானை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிலகாலமாக கோலிவுட்டில் நிலவிவரும் வியாபாரப் போட்டிக் காரணமாக ஏவிஎம் நிறுவனம் படத்தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்தது. தற்போது மீண்டும் அதிகளவிலான படங்களை தயாரிக்கும் முடிவில் களமிறங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே சூர்யா ஏ.வி,எம் கூட்டணியில் உருவான அயன் படம் மிகப்பெரிய ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.