1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 14 ஜூலை 2017 (02:04 IST)

ஆர்த்தி, காயத்ரிக்கு நான் ஈசியா பதில் சொல்லியிருப்பேன். ஹிப்ஹாப் தமிழா ஆதி

மல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' ஏகப்பட்ட சர்ச்சைகளுடன் தொடங்கி சர்ச்சைகளுடனே நடந்து வருகிறது. குறிப்பாக ஆர்த்தியும் காயத்ரியும் ஜல்லிக்கட்டு போராளி ஜூலியை குறிவைத்து தாக்குவது பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.



 
 
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து அதே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட ஹிப்ஹாப் தமிழா ஆதி கூறியதாவது: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டது ஏன் என்று ஜூலியிடம் கேட்ட கேள்விகளை ஆர்த்தியும் காயத்ரியும் என்னிடம் கேட்டிருந்தால் நான் ஈசியா பதில் சொல்லியிருப்பேன்' என்று கூறினார்.
 
மேலும் நான் நடித்து இயக்கியுள்ள 'மீசையை முறுக்கு' திரைப்படம்  விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளதால் என் பட வேலைகளில் மட்டும்தான் நான் கவனம் செலுத்திக் கொண்டு வருகிறேன். ஆனா, ஜூலியானாவைப் பற்றி வந்த சில மீம்ஸ் பார்த்தேன். மற்றபடி 'பிக் பாஸ்' பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது’’ என்று கூறினார்.