1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 30 அக்டோபர் 2017 (13:28 IST)

ஜூலி இன்னும் பொய்தான் கூறுகிறார்: ஹரிஷ் கல்யாண்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்றாலும் அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்கள் பலருடைய மவுசு இன்னும் குறையவில்லை.


 
 
பிக்பாஸ் வீட்டில் தங்கியவர்களில் மிகவும் வெருக்கப்பட்டவர் ஜூலி. அவர் கூறும் பொய்களால் அவர் பெரிதும் சமுக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளானார்.
 
ஆனால், இன்னும் அவர் திருந்தியபாடில்லை. சமீபத்தில் பிக்பாஸ் சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாணும் இதையே கூறியுள்ளார். 
 
நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்ததும் பல நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், ஜூலி அளித்த ஒரு பேட்டியில் ஹரிஷ் கல்யாணுடன் அடிக்கடி போனில் பேசுவதாக குறிப்பிட்டிருந்தார்.
 
தற்போது இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ஹரிஷ் கல்யாண். மேலும், அவர் கூறியதவது ஜூலி இன்னும் பொய்தான் கூறுகிறார். அவர் எனக்கு ஒரே ஒரு முறைதான் போன் செய்தார். அதுவும் இன்டர்வியூ பற்றி தான் பேசினார் என கூறியுள்ளார்.