வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Modified: வியாழன், 3 ஏப்ரல் 2014 (12:36 IST)

கௌதம் - சிம்பு படத்தின் பெயர், பேரு என்னடா...?

என்ன பெயர் என்ன பெயர் என்று தொடர்ந்து குடைச்சல் தந்ததால், பேரு என்னடா...? என்பதையே படத்தின் பெயராக்கிவிட்டார் கௌதம். 
சிம்புவை வைத்து கௌதம் இயக்கி வரும் படத்துக்கு முதலில், சட்டென்று மாறுது வானிலை என்று பெயர் வைத்தனர். வாரணம் ஆயிரம் படத்தில் தாமரை எழுதிய பாடல் வரி. 
 
அந்தப் பெயரை வேறு ஒரு நிறுவனம் சேம்பரில் பதிவு செய்திருந்ததால் கௌதம் அந்தப் பெயரை கைவிட வேண்டி வந்தது. படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்த நிலையில் படத்தின் பெயர் என்ன என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.
 
இந்நிலையில் பேரு என்னடா...? என்பதை படத்தின் பெயராக்கியுள்ளார்.