வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 26 பிப்ரவரி 2015 (16:22 IST)

பென்சில் படத்தில் நிஜ பள்ளி மாணவர்களை நடிக்க வைத்த இயக்குனர்

ஜீ.வி பிரகாஷ் குமார், ஸ்ரீ திவ்யா நடிப்பில் வெளிவர இருக்கும் பென்சில் திரைப்படம் சற்றும் யூகிக்க முடியாத வகையில் புதுவிதமான திரைக்கதை யுக்தி கையாளப்பட்டுள்ளது. 
மாணவர்கள் மட்டும்மல்லாது பெற்றோர்களும் தங்கள் பள்ளி பருவத்தைப் பற்றி நினைவு கூறும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக துணை நடிகர்களை பயன்படுத்தாமல் உண்மையான பள்ளி மாணவ, மாணவிகள் 100 பேருக்கு நடிப்பு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் மணிநாகராஜ். 
 
இவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
படத்தின் இறுதி சண்டை காட்சியில் சண்டை பயிற்சி இயக்குனர் மற்றும் இயக்குனர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஜீ.வி பிரகாஷ் குமாரரும், ஸ்ரீ திவ்யாவும் தாங்களே சண்டைக் காட்சியில் 2 நாட்கள் தொடர்ந்து நடித்து முடித்தனர்.