வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2016 (20:08 IST)

பெப்சி போராட்டம்: படப்பிடிப்புகள் ரத்து

பெப்சி தலைவர் ஜி.சிவா மீது ஒளிப்பவதிவாளர் பி.சி.ஸ்ரீராம், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனைக்கண்டித்து படப்பிடிப்புகள் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் அறிவித்தது.


 

 
தென்னிந்திய திரைப்பட சம்மேளனம்(பெப்சி) இன்று திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கியது. இதனால் இன்று படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
 
பெப்சி தலைவர் சிவா மீது ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தலைவர் பி.சி.ஸ்ரீராம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதனை கண்டிக்கும் விதத்தில் இன்று ஒரு நாள் பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று பெப்சி பொதுச்செயலாளர் கே.ஆர்.செல்வராஜ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
 
அதன்படி படப்பிடிப்புகள் மட்டுமின்றி டப்பிங், பாடல் பதிவு, எடிட்டிங் உள்பட அனைத்து திரைப்பட பணிகளும் முடங்கின.