1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 21 மார்ச் 2017 (15:59 IST)

எனக்கும் இளையராஜாவுக்கும் உள்ள விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம்: எஸ்.பி.பி. உருக்கம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தனது பாடலை பாடியமைக்காக எஸ்.பி.பி., மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டார்களுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பினார்.


 

இதனையடுத்து, இனிமேல் இசைஞானி இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை என பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளது திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், சமூக வலைத்தளங்களில் இந்த விஷயம் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம், “எனது அனைத்து நண்பர்கள், இசைப் பிரியர்கள் முக்கியமாக அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள். இளையராஜா - எஸ்.பி.பி. விவகாரத்தை பரபரப்பாக்க வேண்டாம். அனைத்தும் முடிந்துவிட்டது. நிகழ்ச்சிகள் நடந்தாக வேண்டும். வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல வேண்டும். கடவுளின் படைப்பில் அனைத்தும் நல்லவையே, சமமானவையே! நன்றி" என்று தெரிவித்துள்ளார்.