மணிரத்னத்தின் பழிவாங்கும் படம்
மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் கார்த்தி, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது.
படத்துக்கு ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு வருட இறுதியில் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் ஆரம்பமாக உள்ளது.
சமீபத்திய தகவல், இதுவொரு பழிவாங்கும் படமாக தயாராகிறது. அக்னிநட்சத்திரம் போல என்றும் வைத்துக் கொள்ளலாம்.
பழிக்குப் பழி எப்போதும் தீர்வல்ல என்பது படத்தின் மெசேஜ் எனவும் கூறப்படுகிறது.
படத்தில் இரண்டாவது ஹீரோயின் இருக்கிறார். அவர் யார் என்பதை இன்னும் மணிரத்னம் முடிவு செய்யவில்லை.