வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (17:00 IST)

கவிப்பேரரசு மீது வருத்தத்தில் இருக்கும் இயக்குநர்

இயக்குநரை புகழ்ந்து தள்ளிய கவிஞர் தற்போது தேசிய பெற்ற பின் அந்த இயக்குநரை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம்.


 

 
கிராமத்து அழகியலை தத்ரூபமாக வடிக்கும் அந்த இயக்குநர், இரண்டாவது படத்திலேயே தேசிய விருது வென்றவர். சிறந்த நடிகை, சிறந்த படம், சிறந்த பாடல் என மூன்று தேசிய விருதுகளை வென்றது அந்தப் படம்.

அந்த சமயத்தில் தான் கொடுத்த எல்லா பேட்டிகளிலும் இயக்குநரை வானாளவப் புகழ்ந்தார் கவிஞர். கவிஞர்களுக்கு புகழ சொல்லியா தரவேண்டும்? இயக்குநரே கூச்சப்படும் அளவுக்குக்குப் புகழ்ந்து தள்ளினார்.
 
சமீபத்தில் ஒரு பாடலுக்காக கவிஞருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதே இயக்குநரின் படத்தில் தான் அந்தப் பாடலை எழுதியிருந்தார் கவிஞர். வழக்கம்போல் பேட்டிகளில் முழங்கித் தள்ளிய கவிஞர், இயக்குநரைப் பற்றி ஒரு வார்த்தை கூட எந்த இடத்திலும் சொல்லவில்லையாம்.

இயக்குநரைப் பற்றிக் கேட்ட கேள்விகளையும் தவிர்த்துவிட்டாராம். இதனால், கவிஞர் மீது வருத்தத்தில் இருக்கிறாராம் இயக்குநர்.