1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 4 நவம்பர் 2014 (14:27 IST)

கதை திருட்டை தடுக்க இயக்குனர்கள் சங்கம் புது முடிவு

சமீபமாக தமிழ் சினிமாவில் கதை திருட்டு அதிகரித்துள்ளது. கத்தி படம் கோபி என்பவரின் கதை என்பது உறுதிப்பட்ட நிலையில் கதை திருட்டுக்கு முடிவுகட்ட இயக்குனர்கள் சங்கம் புதிய முடிவை எடுத்துள்ளது.
 
உதவி இயக்குனர்கள் தங்களின் கதையை இயக்குனர்கள் சங்கத்தில் பதிவு செய்யலாம் என்பதே அந்த புதிய முடிவு. அப்படி பதிவு செய்த கதையை வேறொருவர் திரைப்படமாக்கினால் கதை திருட்டை எளிதாக கண்டறிய முடியும்.
 
இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் விக்ரமன் கூறினார்.