வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2016 (11:00 IST)

தமிழுக்கு வரும் கால் டாக்சி கொலை

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம், தீவாரம். அந்தப் படத்தை ஆத்திரம் என்ற பெயரில் தமிழில் வெளியிடுகின்றனர்.


 
 
கால் டாக்சி டிரைவர் ஒரு பெண்ணை கொடூரமாக கொலை செய்கிறான். ஆனால் சில வருடங்களிலேயே வெளியே வந்துவிடும் அந்த குற்றவாளிக்கு சமூகம் ஒரு ஆட்டோ வாங்கித் தந்து போஷிக்கிறது. அதனை தாங்க முடியாத இறந்து போன பெண்ணின் காதலன் கொலைகாரனை கடத்தி வந்து டார்ச்சர் செய்து கொலை செய்வதுதான் தீவராம் படத்தின் கதை. 
 
துல்கர் சல்மான் நடித்த இந்தப் படத்தை ரூபேஸ் பீதாம்பரன் இயக்கியிருந்தார். இதனை ஆத்திரம் என்ற பெயரில் தமிழில் வெளியிடுகின்றனர்.