வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 19 மே 2017 (05:59 IST)

குழந்தை கடத்தல் வழக்கில் சிக்கிய பிரபல நடிகை

நடிகையும் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளுமான வனிதா விஜயகுமார், தனது குழந்தையை தானே கடத்திவிட்டதாக அவரது முன்னாள் கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



 


வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் ஆனந்த்ராஜ் நேற்று ஆந்திர மாநில காவல்துறையில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தனக்கும் வனிதாவுக்கும் கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் நடந்து அதன்பின்னர் 2012-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக இருவரும் விவகாரத்துப் பெற்றதாகவும், தங்களது  குழந்தை ஜெய்நிதா, தன்வசம் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அவ்வப்போது வந்து குழந்தையைப் பார்த்துச் செல்லும் வனிதா ஏப்ரல் முதல் வாரத்தில் குழந்தை ஜெய்நிதாவை தன்னுடைய அனுமதி பெற்று வனிதா அழைத்துச் சென்றதாகவும், ஆனால் குறித்த காலத்திற்குள் மீண்டும் குழந்தையை கொண்டு வந்து தன்னிடம் சேர்க்க வில்லை என்றும் தொலைபேசியில் அழைத்தாலும் பதிலில்லை என்றும் கூறிய ஆனந்த ராஜ் வனிதா மீது குழந்தையைக் கடத்திய பிரிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.