வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2015 (14:41 IST)

சாந்தி திரையரங்கம் விற்பனை - பிரபு அறிவிப்பு

சிவாஜி குடும்பத்துக்கு சொந்தமான சென்னை அண்ணாசாலையில் உள்ள சாந்தி திரையரங்கம் விற்பனை செய்யப்பட்டதாக நடிகர் பிரபு அறிவித்தார்.
 
சென்னை அண்ணா சாலையில் இயங்கி வந்த ஆனந்த், லிட்டில் ஆனந்த் திரையரங்கு உரிமையாளர் உமாபதியால் - அக்னி நட்சத்திரம் படத்தில் வில்லனாக நடித்தவர் - கட்டப்பட்டது சாந்தி திரையரங்கம். அதனை அவரிடமிருந்து 1962 -இல் சிவாஜி கணேசன் வாங்கினார். அன்று முதல் சிவாஜி மற்றும் பிரபு நடித்த அனைத்துப் படங்களும் அதில் திரையிடப்பட்டு வந்தது. 
 
2005 -இல் சாந்தி திரையரங்கை புதுப்பித்து சாந்தி, சாய் சாந்தி என இரு திரையரங்குகளாக மாற்றினர். இந்த திரையரங்குகள் தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது. 
 
சாந்தி, சாய் சாந்தி திரையரங்குகளை இடித்துவிட்டு அதில் 4 திரையரங்குகளுடன் கூடிய வணிக வளாகம் கட்ட கட்டுமான நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.