அக்ஷரா ஹாசனின் அப்பாவித்தனம் - ரீனா டாக்கா சொல்லும் சேதி
ரீனா டாக்கா என்ற பெயர் ஃபேஷன் உலகில் பிரபலம். சிறந்த ஆடை வடிவமைப்பாளர். இவர் வரும் 7 -ஆம் தேதி டெல்லியில் மணப்பெண்களுக்காக தான் பிரத்யேகமாக வடிவமைத்த ஆடைகளை கொண்டு ஃபேஷன் ஷோ ஒன்றை நடத்துகிறார்.
இந்த ஃபேஷன் ஷோவில் ரீனாவின் முதன்மை மாடலாக கலந்து கொள்ளவிருப்பவர் அக்ஷரா ஹாசன்.
ரீனாவின் மனதில் முதலில் இருந்தவர் இந்தி நடிகை அலியா பட். அவரை தவிர்த்து அக்ஷரா ஹாசனை தேர்வு செய்தது ஏன்?
"நான் இந்த ஃபேஷன் ஷோவில் ஆடைகளை பூக்களால் அலங்கரிக்க இருக்கிறேன். அக்ஷரா ஹாசனின் முகத்தில் இருக்கும் அப்பாவித்தனம் பூக்களோடு வடிவமைக்கப்படும் ஆடைகளுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் அவரை தேர்வு செய்தேன்" என்றார், ரீனா டாக்கா.
சரியான தேர்வு, மிகச்சரியான விளக்கம்.