வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 14 மே 2017 (09:55 IST)

ஹிரோயிஸம் செட் ஆகாமல் பழைய ஃபாமுக்கே மாறிய நடிகர்!!

நடிகர் பாபி சிம்ஹா சினிமா வில்லனாக நடிக்க துவங்கினார். வில்லன் வேடமிட்ட ஜிகர்தண்டா படத்திற்காக தேசிய விருதும் பெற்றார்.


 
 
இதன் பிறகு ஹீரோ அவதாரம் எடுத்தார். இத்னால் இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என்றும் கூறி வந்தார். ஹீரோவான பாபி சிம்ஹா பாம்பு சட்டை, உறுமீன் போன்ற படங்களில் நடித்தார். 
 
ஆனால், ஹீரோவாக நடிக்கும் எந்த படங்களுமே ஓடாமல் போனதால் இனிமேல் ஹீரோ செட்டாகாது என்று முடிவெடுத்து மீண்டும் வில்லத்தனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். 
 
தற்போது, ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் கருப்பன் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.