வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 13 ஜூலை 2017 (13:39 IST)

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிக்கடி வாய்பேசி சர்ச்சையில் மாட்டிகொள்ளும் காயத்ரி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 11 போட்டியாளர்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் நடக்கும் திருப்பங்களை பார்த்தால் வாய் சண்டை போட்டு கொண்டிருக்கும் போட்டியாளர்கள், அடுத்து கைசண்டை போடும் அளவுக்கு வந்துவிடும்போல்  இருக்கிறது.

 
 
அண்மையில் இந்த நிகழ்ச்சியில் கஞ்சா கருப்புவை தொடர்ந்து பரணி வெளியேற்றப்பட்டார். இந்த வார எலிமினேஷனில் 4  பேர்கள் உள்ள நிலையில், யார் வெளியேற்றப்படுகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் பல திருப்பங்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி சென்று  கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில் நேற்று முன்தினம் ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் சேரி பிஹேவியர் என காயத்ரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். பிக் பாஸ் நேற்றைய நிகழ்ச்சியில் ஆரார், சக்தி, சினேகன், காயத்ரி ஆகியோர் பேசிகொண்டிருக்கும்போது, ஆரவ் ஓவியாவைப் பற்றி பேசிகையில் அவள் ரொம்ப நடிக்கிறா.. நானும் பொறுத்து போயிட்டிருந்தேன். ஆனால் பரணி விஷயத்தில் நாம முடிவுக்கு எதிராக, அவ முடிவு எடிக்குறது எனக்கு  பிடிக்கவில்லை. உடனே காயத்ரி ஓவியாவை அவ ஒரு மலையாளி அதனால நம்ப முடியாது என கூறினார்.
 
இந்நிலையில் ஏற்கனவே ஜாதியைப் பற்றி பேசி சர்ச்சையில் மாட்டி கொண்ட காயத்ரி, தற்போது மொழிப் பிரச்சனையை  ஏற்படுத்தியுள்ளார்.