செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2020 (09:30 IST)

இந்த வராம் எவிக்ஷனில் சுரேஷ் வெளியேறுகிறா...?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய ஷோ படு மொக்கையாக இருந்தது. டாக்ஸ் , சண்டை வாக்குவாதம் , விளையாட்டு இப்படி அனைத்தும் இருந்தால் தான் பிக்பாஸ் ஸ்வாரஸ்யமாக இருக்கும். சரி இன்றாவது எபிசோட் நல்லா இருக்குமா? என பார்த்தால் முதல் ப்ரோமோவிலே அது புஷ் ஆகிவிட்டது.

சற்றுமுன் வெளியாகியுள்ள ப்ரோமோவில்,  வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தங்களை 1 லிருந்து 16 வரை வரிசைப்படுத்திக்கொள்ளவேண்டும். இதில் வரிசை படுத்துவதற்கு முன்னரே முதல் ஆளாக சுரேஷ் 16 இடத்தில் போய் நின்றுக்கொண்டார். முதல் இடத்தில் இருக்கும் ரம்யா பாண்டியன் பிக்பாஸ் போட்டியாளரின் வெற்றியாளராக குறிக்கிறார்.

எனவே இதில் கடைசி 16வது இடத்தில் இருக்கும் சுரேஷ் இந்த வார எவிக்ஷனில் வெளியேறுபவராக இருக்கலாம் என்பது பிக்பாஸ் கணிப்பு. வீட்டில் இருந்து சுரேஷ் வெளியேறிவிட்டால் அங்கு ஒன்றுமே இல்லை.
சுரேஷ் தாத்தா தான் அங்க இருக்குற பெஸ்ட் டேலண்ட்  மற்றும் சிறந்த எண்டெர்டைனர் என்று கூட சொல்லலாம். ஆனால், ரம்யா பாண்டியனை தர்ஷனை போன்று உசுப்பேத்தி உசுப்பேத்தியே கடைசியில் வேறு யாருக்காவது டைட்டில் கொடுத்துவிவார்கள்.

சுரேஷ் தாத்தா... நீங்க பயப்படாதீங்க உங்கள நாங்க அப்படில்லாம் விட்டுவிட மாட்டோம். நீங்க தான் அதிக ஒட்டு லீடிங்கில் இருக்குறீங்க. வீட்டில் இருக்கிற எல்லோரும் ஒற்றுமையாக தான் இருக்காங்க. ஆனால் சுரேஷை மட்டும் ஒதுக்குகிறார்கள். அப்படியிருந்தும் அவர் துவண்டு விடாமல் ஒற்றை ஆளாக நின்று அடிக்கிறார்.

அர்ச்சனா போட்டியாளரா இல்லை பிக்பாஸ் வீட்டின் நாட்டாமையா...? அர்ச்சனாவின் நடவடிக்கை மிகவும் மோசமாக உள்ளது. அவர் தனக்கு பிடித்தவர்களுக்கு மட்டுமே ஆதரவாக பேசுகிறார். மற்றவர்களுக்கு நாட்டாமை வேலை பார்க்கிறார். தயவுசெய்து இந்த வாரமே அர்ச்சனாவை வெளியேற்றுங்கள் என்பது பரவலான மக்கள் கருத்தாக உள்ளது.