வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 12 ஜனவரி 2021 (12:22 IST)

ஆரியை வம்பிழுக்குறதுல அப்படி என்ன சந்தோசம் இந்த ரியோவுக்கு?

பிக்பாஸ் வீட்டில் நேற்று எவிக்ட்டான போட்டியாளர்கள் மீண்டும் சிறப்பு விருந்தினர்களாக உள்ளே நுழைந்தனர். அதில் அர்ச்சனா, நிஷா , ரமேஷ் , ரேகா ஆகியோரை தொடர்ந்து இன்று சம்யுக்தா மற்றும் சுசித்ரா இருவரும் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
 
பழைய போட்டியாளர்கள் வீட்டிற்கு வந்ததும் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறியது. இதில் அவரவர் தங்களது நண்பர்களை கட்டயணைந்து நலம் விசாரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆரியை மட்டும் யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இது ஆடியன்ஸ் மத்தியில் பெரும் விமர்சனமாக பார்க்கப்பட்டு வருகிறது.
 
இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் வீட்டிற்கு சம்யுக்தா மற்றும் சுசித்ரா வந்துள்ளனர். சம்யுக்தா வந்ததும் பாலாவை கட்டியணைத்து கொஞ்சினார். அதை பார்த்து பாலா கண்கலங்கி அழுது உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன் என கூறினார். அடுத்ததாக வெளியான ப்ரோமோவில் நாம் பெரிதாக எதிர்பார்த்த சனம் ஷெட்டி பிக்பாஸ் வீட்டிற்கு வந்துவிட்டார். 
 
இதில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் விருந்தினர்களை ஒரு ஒரு கூட்டமாக சேர்த்துக்கொண்டு புதிய டாஸ்க் விளையாட ரெடியாகின்றனர். அதில் ஆரி பக்கம் ரேகா ,சனம் ஷெட்டி இருக்கின்றனர். இதில் ஆட்கள் பிரிக்கும்போது ஆரியிடம் நக்கலாக பேசிய ரியோவை செம காண்டில் திட்டி விட்டார் ஆரி... பின்னர் இருவரும் மனக்கசப்புடனே மன்னிப்பு கேட்க வீட்டில் புதிய சண்டை ஆரம்பித்துள்ளது.