1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 27 ஜூன் 2017 (13:29 IST)

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒன்னே ஒன்னு கேட்டு கெஞ்சிய நடிகை ஓவியா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், 15 போட்டியாளர்களில் ஒருவராக நடிகை ஓவியாவும்  ஒருவர். இந்த நிகழ்ச்சியில் வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் அங்கேயே தங்கி இருக்க வேண்டும்.

 
 
அவர்கள் அங்கு தங்கி இருக்கும் அந்த நாட்களில் அவர்களுடைய வேலையை அவர்களே செய்ய வேண்டும், தமிழில் பேச  வேண்டும் என்பது விதிகள் ஆகும்.
 
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் காலையில் தூக்கம் இன்றி தவித்த நடிகை ஓவியா, அதிகாலையில் எழுந்து, கண்ணை  மூடிக் கொண்டு, கேமிரா முன்பு நின்று கொண்டு எனக்கு ஒன்னே ஒன்னு கொடுத்தால் போதும் என்றும் மற்ற 14 பேரிடமும் இதை பற்றி சொல்லமாட்டேன் ப்ளீஸ்.. ப்ளீஸ் என்று கெஞ்சினார். பிறகு உங்க சொத்தையா எழுதி கேட்கிறேன் ஒரு வாழைப்பழமும், பிளாக் டீயும்தானே வேண்டும் என்று கேட்கிறேன் என்றார் பரிதாபமாக கேட்டார். 
 
ஐயோ பாவம்... ஆனால் பிக் பாஸ் யூனிட்டில் யாரும் அவருக்கு அந்த ஒன்னே ஒன்னு கொடுக்கவில்லை.