வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 14 ஜூலை 2017 (12:45 IST)

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்படும் மாற்றங்களுக்கு இதுதான் காரணமா!

பிரபல தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யகோரி இந்து மக்கள் கட்சி புகார் அளித்தது. இந்நிகழ்ச்சி ஆபாசமாக இருப்பதாகவும், கலாச்சார சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவும் கூறி அதை தடை செய்யவேண்டும் என்று அதில் கூறியுள்ளது. இதனை தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளது.

 
நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம் 'சேரி' என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் ஆபாசம் ஒன்றும் இல்லை என நேற்று கமல் பேட்டியளித்த நிலையில், நேற்று ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது நன்றாகவே தெரிகிறது.
 
நேற்றைய நிகழ்ச்சியில் பிரபலங்களிடையே போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் அரைகுறை ஆடையுடன் வலம் வந்த நடிகை ஓவியா போட்டியின் நிபந்தனையின்படி 15 தோப்புக்கரணம் போட வேண்டும் என கூறப்பட்டது. குழந்தைகள் எல்லாம் ஷோ  பார்ப்பதால், பேன்ட் அணிந்து வந்தபிறகு தோப்புகரணம் போடும்படி மற்ற போட்டியாளர்கள் சொல்ல உடனே ஓவியா உள்ளே சென்று கால்சட்டை அணிந்து வந்து தோப்புகரணம் போடுகிறார்.