1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2016 (18:07 IST)

பலே வெள்ளையத்தேவா... சாதி பெருமையை விடாத சசிகுமார்

கர்ண கடூரமாக நாலைந்து சண்டைக் காட்சிகள், அதைவிட கொடூரமாக ஒரு காதல், சாதி பெருமையை பிரதிபலிக்ககும் நான்கைந்து வசனங்கள்... இந்த முக்கலவையை கிராமத்துப் பின்னணியில் சொன்னால் எந்த மொக்கப்படமும் ஹிட்டாகும் என்று சசிகுமார் நம்பியிருக்கிறார். இல்லையென்றால், கிடாரியைத் தொடர்ந்து பலே வெள்ளையத்தேவா என்ற பெயரில் படம் நடிப்பாரா...?

 
 
சோலை பிரகாஷ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் சசிகுமார் தயாரித்து இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கியுள்ளது. சங்கிலி முருகன், கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். 
 
செப்டம்பர் 21-ம் தேதி முதல் தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. நவம்பர் 14-ம் தேதிக்குள் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று படக்குழு கூறியுள்ளது. 
 
தற்போது இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.