1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 24 மே 2017 (13:34 IST)

பாகுபலி படத்தில் பொட்டிற்கு பின்னாடி ரகசியத்தை ஒளித்து வைத்த ராஜமெளலி!!

பாகுபலி படத்தில் நடித்த முக்கிய கதாபாத்திரங்களான பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் ஆகியோர் நெற்றியில் வைத்துள்ள பொட்டிற்கு பின்னால் ஒரு ரகசியம் உள்ளது.


 
 
அது என்ன ரகசியம் எனில் அவர்கள் வைத்திருக்கும் பொட்டு அவர்களின் குணங்களை குறிக்குமாம்.
 
ரம்யா கிருஷ்ணன்:
 
ரம்யா கிருஷ்ணன் வைத்திருக்கும் முழு நிலவு வடிவிலான பொட்டு அவர் சமத்துவம், தைரியம், அக்கறை ஆகிய குணங்களை பெற்றவர் என்பதை குறிக்குமாம்.
 
பாகுபலி: 
 
அரை நிலவு வடிவம் மதங்களின் ஒற்றுமை, இரக்கக்குணம், போராடும் மனம் ஆகியவற்றை குறிக்கின்ரதாம்.
 
அனுஷ்கா:
 
அனுஷ்கா நெற்றியில் இருக்கும் பொட்டு ஆண், பெண் இருவருமே சமம் என்பதை உணர்த்துவதாம்.
 
சத்யராஜ்:
 
கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் நெற்றியில் இருக்கும் பொட்டு விசுவாசம் மற்றும் உதவியற்ற நிலையை குறிக்குமாம்.
 
நாசர்:
 
நாசரின் பொட்டு வஞ்சகத்தன்மையின் வெளிபாடகும். 
 
ராணா:
 
ராணா பொட்டின் ரகசியம் எத்தனை வருடங்கள் கழிந்தாலும் தன்நிலை மாறாமல் இருப்பதை குறிப்பதாகும்.