வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2017 (11:09 IST)

‘பாகுபலி’ வெற்றி: சரித்திரக் கதையில் சல்மான் கான்

‘பாகுபலி’யின் வெற்றியைப் பார்த்து பிரமிப்பில் ஆழ்ந்த சல்மான் கான், தானும் அதுபோன்ற ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகத்  தெரிவித்துள்ளார்.

 
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், இரண்டு பாகங்களாக வெளியானது ‘பாகுபலி’. இரண்டு பாகங்களின் வசூலும் சேர்த்து கிட்டத்தட்ட 2500 கோடி ரூபாயைத் தொட்டுவிடும் போல் தெரிகிறது. இதனால், தாங்கள் தான் இந்திய சினிமா என்று மார்தட்டிக் கொண்டிருந்த பாலிவுட் கான்களுக்கு பலத்த அடி. ஒருவர் கூட ‘பாகுபலி’யைப் பற்றி வாய் திறக்கவில்லை.
 
இந்நிலையில், ‘பாகுபலி’ போன்ற சரித்திரக் கதையில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார் சல்மான் கான். எனவே, ‘பாஜிராவ் மஸ்தானி’ போன்ற சரித்திரப் படங்களை இயக்கிய சஞ்சய்லீலா பன்சாலியை அழைத்து, அதேபோன்று தனக்கும் ஒரு கதை எழுதச் சொல்லி கேட்டிருக்கிறார் சல்மான் கான். தற்போது ‘பத்மாவதி’ என்ற சரித்திரப் படத்தை இயக்கிவரும் சஞ்சய்லீலா  பன்சாலி, அடுத்ததாக சல்மான் கானுக்கான கதையை எழுதப் போகிறார்.