வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 1 ஏப்ரல் 2017 (15:58 IST)

பாகுபலியை தொலைக்காட்சி தொடராக எடுக்கும் ராஜமௌலி!

மிகவும் எதிர்பார்ப்புகளிக்கிடையே உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ள பாகுபலி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 28ஆம் தேதி பாகுபலி வெளியாகிறது. இந்நிலையில் பாகுபலி தொடர்பான முதல் புத்தகம்  “தி ரைஸ் ஆஃப் சிவகாமி” (The Rise Of Sivagami) எனும் பெயரில் புகழ் பெற்ற எழுத்தாளர் ஆனந்த நீலகண்டனால்  எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

 
 
தி ரைஸ் ஆஃப் சிவகாமி என்ற மூன்று புத்தகங்கள் வெளிவர உள்ள நிலையில் இது முதல் மட்டும்தான். இந்த புத்தகத்தில்  சிவகாமி எப்படி மகிழ்மதியின் ராஜமாதாவாக மாறினார் என்பது குறித்து கூறப்பட்டுள்ளதாம்.
 
புத்தகம் வெளியீட்டு விழாவில் பாகுபலி இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  புத்தகத்தை அடிப்படையாக கொண்டு தொலைக்காட்சி தொடர் எடுக்க உள்ளதாகவும், நார்மல் தொலைக்காட்சி நாடகங்கள்  போல் இல்லாமல் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்படும் என்றும் கூறினார். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற  கேள்விக்கு, இரண்டு வருடம் காத்திருந்த உங்களுக்கு, ஒரு மாதம் காத்திருப்பீர்கள் என நம்புகிறேன் என்று கூறிவிட்டாராம்.