1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 25 மார்ச் 2015 (15:32 IST)

படம் இயக்குகிறார் ஆட்டோகிராஃப் மல்லிகா

ஆட்டோகிராஃப், திருப்பாச்சி உள்பட பல படங்களில் நடித்த மல்லிகா குறுகிய காலத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்தார். அதே வேகத்தில் அவரது நடிப்பு வாழ்க்கை முடிவுக்கு வந்து சொந்த மாநிலமான கேரளாவில் செட்டிலாகிவிட்டார்.
 

 
மலையாளத்தில் நடிகையாக குறிப்பிடத்தகுந்த இடத்தை பிடிக்க முடியவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு உள்ளது. விரைவில் மல்லிகா இயக்குனராகிறார் என்பதே சமீபத்திய செய்தி.
 
கதாசிரியர் கல்லூர் டென்னிஸ் எழுதிய, பழனியிலே கனகம் என்ற கதையைதான் அவர் படமாக்குகிறார். யமுனா தேவி என்ற சினிமா நடிகைக்கு டூப்பாக படங்களில் பயன்படுத்தப்படுகிறவர், கனகம். அந்த கனகத்தை இந்த உலகம் ஒரு செக்ஸ் உபகரணமாகதான் பார்க்கிறது. அவளது மனவோட்டாம்தான் படத்தின் அடிநாதம்.
 
யமுனா தேவியாக பாவனாவும், கனகமாக மல்லிகாவும் நடிக்கின்றனர். படத்தை மல்லிகாவே இயக்குகிறார். கனகமாக நடிக்க யாரும் முன்வராததால் நானே அந்த வேடத்தை செய்வது என்று முடிவு செய்தேன் என்கிறார் மல்லிகா. மல்லிகாவுக்கு இயக்குனர் தொப்பி பொருந்துகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.