வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Murugan)
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2017 (16:51 IST)

உணர்ச்சியை அடக்க முடியாத அட்லீ..

‘என்னால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ என இயக்குநர் அட்லீ பேசியுள்ளார்.


 

 
‘தெறி’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய்யை இயக்கி வருகிறார் அட்லீ. மூன்று கேரக்டர்களில் விஜய் நடிக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான், இந்தப் படத்துக்கு இசையமைக்க, ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
 
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அட்லீ, “இயக்குநராகப் பேச வேண்டுமானால், நான் கொஞ்சம் அடக்கி வாசித்தாக வேண்டும். நான் இயல்பிலேயே தளபதி ரசிகன். அவரை வைத்துப் படம் இயக்க வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்தேன். விஜய்யை எப்படியெல்லாம் பார்க்க ஆசைப்படுகிறோமோ, அப்படி ஒரு படம் பண்ணும்போது என்னால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இயக்குநராக சில விஷயங்களைச் சொல்லக்கூடாது என தோன்றும். ஆனால், தளபதி ரசிகனாகப் பார்த்தால் சொல்லாமல் இருக்க முடியாது” என்று பேசியுள்ளார்.