1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 10 மே 2017 (10:01 IST)

நடிகைகளை கவர்ச்சி ஆடையில் பார்க்க சினிமாவுக்கு வருகிறார்களா? : நடிகை மஞ்சிமா மோகன் ட்வீட்!

சினிமா "நடிகைகள், கவர்ச்சியாக உடை அணிந்தால்தான், பணம் கொடுத்துப் படம் பார்க்கும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைவார்கள். அதனால், எனது படங்களில் நடிகைகளின் ஆடை கவர்ச்சியாக இருப்பதை உறுதி செய்வேன்" என்று தமிழ் திரைப்பட இயக்குநர் சுராஜ் தெரிவித்திருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 
நடிகைகள் தமன்னா, நயன்தாரா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, சுராஜ் மன்னிப்புக் கோட்டார். தற்போது உடை பற்றி ட்வீட் போட்ட நபருக்கு மஞ்சிமா அளித்த பதில் ட்வீட்டில், ஹீரோயின்களை நிர்வாணமாக பார்க்கத் தான்  மக்கள் தியேட்டருக்கு வருகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. 
 
”நல்ல படத்தை பார்க்க தான் வருகிறார்கள், ஆடை குறைப்பதை பார்க்க அல்ல” என கூறியுள்ளார். ஒரு வடக்கன் செல்ஃபி  படம் மூலம் ஹீரோயின் ஆனவர் கேரளாவை சேர்ந்த மஞ்சிமா மோகன். அச்சம் என்பது மடமையடா படம் மூலம் கோலிவுட்  வந்தார்.
 
தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக சத்ரியன் படத்தில் நடித்து முடித்துள்ளார் மஞ்சிமா. உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக இப்படை வெல்லும் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.