வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (20:38 IST)

இந்திய திரை இசையின் ஓர் இன்றியமையா சகாப்தம் மறைந்தது – விஜய் பட இயக்குநர் உருக்கம் !

இந்திய திரை இசையின் ஓர் இன்றியமையா சகாப்தம் மறைந்தது – விஜய் பட இயக்குநர் உருக்கம் !
 

கொரோனா தொற்று காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது ஒட்டுமொத்த இசையுலகிற்கும் நேர்ந்த இழப்பு ஆகும்.

இந்நிலையில் பல்துறை பிரமுகர்காள், சினிமா நட்சத்திரங்கள், ரசிர்கள் , விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திரைக்கதை எழுத்தாளர் ரத்னகுமாரும்  விஜய்யின் மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜும்  , எஸ்பிபி க்கு இரங்கல் தெரிவித்து டுவிட் பதிவிட்டுள்ளார்.

இந்திய திரை இசையின் ஓர் இன்றியமையா சகாப்தம் மறைந்தது. உங்கள் பாடலால் அழ வைத்தீர்கள் இன்று உங்கள் புகைப்படம் பார்த்தாலே அழுகை வருகிறது.

கிள்ளுவதை கிள்ளி விட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்..என்று அவர் பாடிய பாடலைப் உருக்கமுடன் பதிவிட்டுள்ளனர்.