செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 27 மார்ச் 2017 (22:27 IST)

கமலின் மகாபாரத பேச்சுக்கு அக்‌ஷரா ஹாசன் கூறிய நாசுக்கான கருத்து

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக மகாபாரதம் குறித்து அவர் கூறிய கருத்தால் ஒருசிலர் நீதிமன்ற படியை ஏறியுள்ளனர். கமலுக்கு நெருக்கமான ஒருசிலரே அவர் மகாபாரதம் குறித்து கூறிய கருத்துக்கு அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.



 


இந்நிலையில் கமலின் இரண்டாவது மகளும் நடிகையுமான அக்சராஹாசன் கமலின் மகாபாரத கருத்து குறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது, 'அப்பா எதையும் ஆழமாகவும் அழுத்தமாகவும் பேசுபவர். வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் இது போன்ற சம்பவங்கள் நிறைய இருக்கு. அவர் மேல் எழும் சர்ச்சை குறித்து அவரிடம் கேட்பதும், அதற்கு அவர் பதில் சொல்வது தான் சரியாக இருக்கும்' என்று நாசுக்கான பதிலை கூறி தப்பித்து கொண்டார்

கமலின் இந்த கருத்து குறித்து அவரது இன்னொரு மகளான ஸ்ருதிஹாசன் கருத்து கூற மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.