வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: ஞாயிறு, 11 டிசம்பர் 2016 (15:05 IST)

ஐஸ்வர்யாவின் கோரிக்கை ஏற்பு, சிறந்த சண்டை காட்சிக்கும் இனி தேசிய விருது!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா தனுஷ், சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். சினிமா துறையில் சண்டை கலைஞர்களைப் பற்றிய திரைப்படம் ஒன்றை அவர் உருவாக்கி வருகிறார். அந்த படத்திற்கு ‘சினிமா வீரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அப்படத்திற்கு குரல் கொடுக்க ரஜினிகாந்த் சம்மதித்துள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகின. 

 
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி வெங்கய்யா நாயுடுவை சந்தித்த ஐஸ்வர்யா தனுஷ், இந்திய சினிமாவுக்கான தேசிய விருதுகள் வழங்கும் பட்டியலில் ஸ்டண்ட் காட்சி இயக்குனர்களும் கவுரவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். 
 
இதுதொடர்பாக இதனை பரிசீலித்த மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு அடுத்த ஆண்டு நடைபெறும் 64-வது தேசிய விருது வழங்கும் விழாவில் சிறப்பான வகையில் சண்டை காட்சிகளை அமைக்கும் ஸ்டன்ட் மாஸ்டருக்கு தேசிய விருது அளிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளார். மேலும், சிறந்த ஒலியமைப்பு மற்றும் சிறந்த லொக்கேஷன் ஒலிப்பதிவாளர் என்ற பிரிவின்கீழும் அடுத்த ஆண்டில் இருந்து தேசிய விருதுகள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.