வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 16 அக்டோபர் 2018 (15:38 IST)

சினிமாவுக்கு பிரேக் விட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாக்களில் முன்னனி நடிகையாக இருந்து வருகிறார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஓய்வில்லாமல் தொடர்ந்து நடித்து வருகிறாராம். அதனால் அடுத்த 2 மாதங்கள் முழு ஓய்வு எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். 
 
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சண்டக்கோழி 2-ம் பாகம் மற்றும் சர்கார் படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. இந்நிலையில் தற்போது ஒரே ஒரு மலையாளப்படம் மட்டும் கைவசம் உள்ளதாம். 
 
இதை குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியது, தொடர்ந்து படங்களில் நடித்து வந்ததால்  3 ஆண்டுகளாக சரியான தூக்கம் இல்லை, ஓய்வு இல்லை. அதனால் அடுத்த 2 மாதங்கள் முழு ஓய்வு எடுக்கப்போகிறேன். இதற்காக வெளிநாட்டுக்கெல்லாம் போகவில்லை. என் வீட்டிலேயே இருந்து தோட்ட வேலை, சமையல் வேலை செய்து பொழுதை கழிப்பேன். 
 
இதுவரை 20 கதைகள் கேட்டு வைத்திருக்கிறேன்.ஆனால் எதையும்  நான் இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த ஓய்வுக்கு பிறகு தான் படங்களில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.