1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (19:22 IST)

சபரிமலைக்கு பெண்கள் செல்வதுக்கு எதிராக கோர்ட்டில் சீராய்வு மனு: நடிகை ரஞ்சனி

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு  நடிகை ரஞ்சனி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஐய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதித்த நீதிமன்றத்தின் தீர்ப்பை தான் ஆச்சரியமாக பார்க்கவில்லை என்றார்
.
ஏனெனில் வட இந்தியர்களுக்கு ஜய்யப்பனையும் தெரியாது என்றும் நமது வழிபாட்டுமுறைகளும் தெரியாது என்றும் ரஞ்சனி கூறினார்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்செய்ய முடிவு செய்துள்ளோம். என்று தெரிவித்தார்.
 
முதல் மரியாதை, கடலோர கவிதைகள், மண்ணுக்குள் வைரம், உரிமை கீதம் உள்பட பலபடங்களில் நடித்த ரஞ்சனி தற்போது கேரளாவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.