வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Murugan)
Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2017 (18:39 IST)

சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?

சுரபி நடிக்க இருக்கும் ‘குறள்’ படமாவது அவருக்குத் திருப்பம் தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 


 

 
டெல்லியைச் சேர்ந்த சுரபி, விக்ரம்பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’ படத்தில் ஹீரோயினாக சினிமாவுக்கு அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் சரியாகப் போகவில்லை. எனவே, தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர், விஷ்ணு விஷால் நடித்த ‘ஜீவா’ படத்தில் ஒரு பாடலில் சில காட்சிகள் தோன்றினார்.
 
வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்குப் பக்கம் ஒதுங்கிய சுரபி, ஜெய் ஜோடியாக ‘புகழ்’ படத்தில் நடித்தார். அந்தப் படமும் ஊத்திக்கொள்ள, தெலுங்கிலேயே செட்டிலாகிவிட்டார். இருந்தாலும், தமிழ் சினிமா மீதான ஆசை அவரை விடவே இல்லை.
 
தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘அடங்காதே’ படத்தில் நடித்துவரும் சுரபி, ‘குறள்’ என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். பிரபல தெலுங்கு நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு, இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். திருக்குறளின் 388வது குறளை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்படுகிறது. இந்தப் படம் மூலமாவது சுரபிக்குத் தமிழ் சினிமாவில் திருப்பம் ஏற்படுமா என்று பார்க்கலாம்.