1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : சனி, 24 ஜூன் 2017 (12:28 IST)

நடுரோட்டுக்கு வந்த நயன்தாரா.. பெங்களூரில் களோபரம்....

நடிகை நயன்தாரா தற்போது இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.


 

 
சமீபத்தில் அப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடந்தது. அதில், நயன்தாரா ஒரு சாலையில் நடந்து செல்வது போன்ற காட்சியை படமாக்கினார்கள். எனவே, பொதுமக்கள் கடந்து செல்லும் ஒரு முக்கிய சாலையில் நயன் நடக்க தொடங்கினார். 
 
அப்போது அவரை அடையாளம் கண்டு கொண்ட பலர் அவரின் பெயரை சொல்லி கூச்சலிட்டனர். மேலும், அவரின் பின்னாலேயே சிலர் பின் தொடர்ந்து நடக்க தொடங்கிவிட்டனர். எனவே, அங்கிருந்த போலீசார் அவர்களை ஒழுங்கு படுத்தினர். ஆயினும், நேரம் செல்ல செல்ல அங்கு கூட்டம் அதிகரித்தது. எனவே, படப்பிடிப்பை முடித்துக்கொள்ளுமாறு போலீசார் கூறவே, அங்கிருந்து படப்பிடிப்பு குழுவினர் ஜூட் விட்டனர்.