வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2016 (16:13 IST)

நீச்சல் குளத்தில் மூழ்கிய நடிகை : படப்பிடிப்பில் பரபரப்பு

ஒரு சினிமா படப்பிடிப்பில், அந்த படத்தின் கதாநாயகி நீச்சள் குளத்தில் மூழ்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.


 

 
சிலந்தி என்ற படத்தை இயக்கிய ஆதிராம் தற்போது அதர்வணம் என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த ரணதந்த்ரா என்ற பெயரில் கன்னடத்திலும் வெளிவர உள்ளது.
 
கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய டாக்டர் ராஜ்குமாரின் மருமகன் விஜயராகவேந்திரா இந்த படத்தின் மூலம் கதாநாயகனக அறிமுகமாகிறார்.
 
இப்படத்தில் ஹரிப்பிரியா என்பவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே தமிழில் கனகவேல் காக்க, வல்லக்கோட்டை, முரண், வாரோயோ வெண்ணிலாவே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.


 

 
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, பெங்களூர், மைசூர் போன்ற இடங்களில் நடந்து வருகிறது.  ஒரு காதல் ஜோடியின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்கள், அவர்களை எப்படி பிரச்சனையில் சிக்க வைக்கிறது என்பதுதான் கதை.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில், பெங்களூரில் ஒரு நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்டது. ஹரிப்பிரியா அந்த நீச்சல்குளத்தில் நீந்துவது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. இதற்காக அவர் காலை முதல் மாலை வரை சுமார் 10 மணி நேரம் நீச்சல்குளத்திலேயே இருந்தார். 


 

 
படப்பிடிப்பு முடிய இருந்த வேளையில், ஹரிப்பிரியா திடீரென தன்ணீரில் மூழ்கிவிட்டார். இதனால் பதறிய படப்பிடிப்புக் குழுவினர் அவரை காப்பாற்றி கரை சேர்த்துள்ளனர்.
 
நீண்ட நேரமாக தண்ணீரில் நீந்தியதில் சோர்வு அடைந்ததால், தண்ணீரில் மூழ்கி விட்டேன் என்றும், எனது உழைப்பிற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்று நம்புவதாகவும் நடிகை ஹரிப்பிரியா தெரிவித்தார்.