வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Modified: செவ்வாய், 8 ஏப்ரல் 2014 (11:41 IST)

திருமணமே வேண்டாம் - திவ்யாவின் தடாலடி

காதல் தோல்வியா இல்லை அரசியல் ஆர்வமா? இப்போதைக்கு மட்டுமில்லை எப்போதைக்கும் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என தடாலடியாக அறிவித்துள்ளார் நடிகை திவ்யா ஸ்பந்தனா.
கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் திவ்யா ஸ்பந்தனா. அரசியல் பிரவேசம் காரணமாக சினிமாவுக்கு முழுக்கு போடுவதாக அறிவித்தவர் தற்போது திருமணத்தையும் தனது வாழ்விலிருந்து தள்ளி வைத்துள்ளார்.
 
தீவிர அரசியலில் ஈடுபட்டு எனது தொகுதிக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்யப் போகிறேன். திருமணம் செய்து குடும்பமானால் அதெல்லாம் செய்ய முடியாது. அதனால் எப்போதுமே திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி தந்தார்.
 
திவ்யா தனது காதலர் ரபேலுடன் சுற்றித் திரிந்தது அனைவருக்கும் தெரியும். காதல் கைகூடாத ஏக்கமா இந்த திருமண வெறுப்புக்கு காரணம்?
 
அப்படியெல்லாம் இல்லையாம். ரபேலுடனான நட்பு எப்போதும் போல் இப்போதும் தொடர்கிறதாம். ஆனால் அந்த நட்பு காதலாகவோ, திருமணமாகவோ பரிணமிக்க எந்த வாய்ப்பும் இல்லை என்றார் திட்டவட்டமாக. 
 
தொகுதி மக்களுக்காக திருமணத்தையே தள்ளி வைத்த திவ்யா ஸ்பந்தனா என்று மாண்டியா தொகுதி காங்கிரஸார் பிளெக்ஸ் வைத்து பிரச்சாரம் செய்யலாம், வெற்றி நிச்சயம்.