வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ashok
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2015 (12:32 IST)

நடிகர் விஷால் மீது சரத்குமார் கிரிமனல் வழக்கு

நடிகர் சங்க தேர்தலிலை முன்னிட்டு  என்மீது பொய் பரபரப்புரை செய்து வருவதாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மீது கிரிமனல் வழக்கை சரத்குமார் தொடர்ந்தார்.
 

 


 
வருகின்ற 18 ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எப்பொழுதும் இல்லாத வகையில் தற்போதைய  நடிகர் சங்க தேர்தல்,  சரத்குமார், விஷால் அணியினர் என்று இரு பிரிவாக பிரிந்து  பரபரப்புடன் செயல்பட்டு வருகிறது.

மேலும், விஷால் அணியினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நாடக நடிகர்களை சந்தித்து, பிரச்சரம் செய்துவருகின்றனர். இந்நிலையில் சரத்குமார் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விஷால் மீது கிரிமனல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
நடிகர் சங்க தேர்தலை முன்னிட்டு இவர் பல இடங்களில் என்மீது பொய் பரபரப்பை செய்திவருவதாக என்று சரத்குமார் குற்றச்சாட்டியுள்ளார்.
 
இது குறித்து விஷாலிடம் கேட்ட போது  சரத்குமார்  ஊழல் செய்து உள்ளதாகவும், பொதிய ஆதரத்துடன்தான் நான் பேசிவருகிறேன் என்றும் இந்த வழக்கு சட்டப்படி சந்திக்க தயார் என்றும் அவர் தெரிவித்தார்.