வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2015 (09:03 IST)

நடிகர் சங்கத்தில் 60 கோடி ஊழல் - சரத்குமார், ராதாரவி மீது எஸ்.வி.சேகர் குற்றச்சாட்டு

நடிகர் சங்க கட்டிடத்தை வாடகைக்கு விட்டதில் 60 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், அதனை மூடி மறைக்கவே சரத்குமாரும், ராதாரவியும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகின்றனர் எனவும் எஸ்.வி.சேகர் குற்றஞ்சாட்டினார்.
 

 
மன்னார்குடியில் நிருபர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது.
 
"நடிகர் சங்க கட்டிடத்தை வாடகைக்கு விட்டதன் மூலம் ரூ. 60 கோடி ஊழல் நடந்துள்ளது. போலி உறுப்பினர்களை அதிகமாக சேர்த்துள்ளனர். அதனை வரைமுறைப்படுத்தவில்லை. 9 பேர் நிர்வாக குழுவில் இடம் பெற்றிருக்கும் போது சரத்குமாரும், ராதாரவியும் சேர்ந்து தன்னிச்சையாக அனைத்து முடிவுகளையும் எடுத்துள்ளனர். 
 
இதுவரை தாங்கள் பொறுப்பில் இருந்த போது அனைத்து ஊழல்களையும் மூடி மறைப்பதற்காகத்தான் மீண்டும் தலைவர் பதவியை தக்க வைத்து கொள்வதற்காக முயற்சி செய்கின்றனர்."
 
- இந்த குற்றச்சாட்டு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.