1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2015 (13:32 IST)

சாந்தனுவுக்காகத்தான் விஷால் அணி கூட்டத்துக்கு சென்றேன் - பாக்யராஜ் விளக்கம்

அக்டோபர் 2 -ஆம் தேதி விஷால் அணியினர் நடத்திய கூட்டத்தில் பாக்யராஜ் கலந்து கொண்டார்.


 

 
நேற்று சரத்குமார் அணியின் பத்திரிகையாளர் சந்திப்பிலும் கலந்து கொண்டார். பாக்யராஜ் விஷால் அணியா இல்லை சரத்குமார் அணியா? குழப்பத்தை அவரே தீர்த்து வைத்தார்.
 
"என்னுடைய மகனுக்காகத்தான் விஷால் அணியின் கூட்டத்தில் கலந்து கொண்டேன். மகனிடம் மனைவி மூலமாகத்தான் பேச வேண்டியிருக்கிறது. அந்தளவுக்கு குடும்பத்திலேயே இந்த தேர்தல் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 
இரண்டு தரப்பும் சமாதானமாகப் போக வேண்டும் என்றுதான் அவர்கள் கூட்டத்தில் பேச நினைத்தேன். ஆனால், முடியாமல் போனது. இங்கு இப்போது அதனை சொல்கிறேன்" என்றார்.
 
அப்பா பாக்யராஜ் சரத்குமார் அணி, மகன் சாந்தனு விஷால் அணி. குடும்பத்திலேயே இந்தத் தேர்தல் பிளவை ஏற்படுத்திவிட்டதே.