வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : சனி, 10 அக்டோபர் 2015 (12:07 IST)

சரத்குமார் மீது நானும் வழக்குப் போடுவேன் - விஷால்

உண்மைக்கு மாறாக அவதூறு பரப்பி வருகிறார் என சரத்குமார் விஷால் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார்.


 

 
வழக்கை சட்டப்படி சந்திக்கப் போவதாக கூறியிருக்கும் விஷால், சரத்குமார் மீது தானும் வழக்கு தொடரப் போவதாக கூறியுள்ளார்.
 
நடிகர் சங்கக் கட்டிடத்தை சங்க உறுப்பினர்களின் அனுமதி பெறாமல் இடித்தது, வருமான வரி கட்டாதது என பல குற்றங்கள் உள்ளன. அதனை நிரூபிப்பதற்காக நான் சரத்குமார் மீது வழக்கு தொடர்வேன் என விஷால் தெரிவித்துள்ளார்.
 
நடிகர் சங்க தேர்தல் நெருங்கும் நேரம் பிரச்சனைகள் இன்னும் பிரமாண்டமாகலாம்.