1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Updated : செவ்வாய், 17 ஜூன் 2014 (17:48 IST)

கிளாமருக்கு நான் தயார்

கிளாமருக்கும், வல்கருக்கும் சின்ன வேறுபாடுதான் உண்டு. நான் கிளாமராக நடிக்க எப்போதும் தயாராகவே இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைத்தது கிராமத்து வேடம். தாவணிக்குதான் அவர் சரி என்று திரையுலகம் நம்பிக் கொண்டிருந்த நேரத்தில் எப்படியாவது அந்த இமேஜிலிருந்து வெளியேற துடித்துக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா.
 
அந்த நேரத்தில் திருடன் போலீஸ் பட வாய்ப்பு வந்தது. அது நகரத்து சப்ஜெக்ட். கல்லுnரி மாணவி வேடம். அந்த ஒரே காரணத்துக்காக உடனே திருடன் போலீஸில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்கிறார். படத்தில் இவர் இன்ஸ்பெக்டரின் மகளாக வருகிறார். இவரை காதலிப்பது திருடனான தினேஷ். ஐஸ்வர்யா ஒரு முழுநீள காமெடிப் படத்தில் நடிப்பது இதுதான் முதல்முறை.
 
சீனு ராமசாமியின் இடம் பொருள் ஏவலில் விஷ்ணு ஜோ‌டியாகவும் ஐஸ்வர்யா நடித்து வருகிறார். இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத ஒரு வேடம். அதுபற்றி இதற்கு மேல் இப்போது கூற முடியாது என்று சஸ்பென்ஸ் வைக்கிறார். இன்றைய சினிமாவில் கிளாமர் இல்லாமல் காலந்தள்ள முடியாது என்பது ஐஸ்வர்யாவுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.
 
அதேநேரம் வல்கராகவோ, ஐட்டம் நம்பருக்கு ஆடவோ மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.