1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 18 டிசம்பர் 2014 (09:14 IST)

டயாலிசிஸ் சிகிச்சைக்குப் பிறகும் முன்னேற்றமில்லை - கே.பாலசந்தர் தொடர்ந்து கவலைக்கிடம்

இயக்குனர் சிகரம் பாலசந்தர் காய்ச்சல் காரணமாக கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
 
நேற்றுமுன்தினம் அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதால் நிலைமை மோசமானது. நேற்று பாலசந்தருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது. அதன் பிறகும் அவரது உடல்நிலையில் முன்னேற்றமில்லை, தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் அவர் இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.