வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 அக்டோபர் 2018 (12:40 IST)

மிஷ்கின் என்னை ஏமாற்றிவிட்டார் - புதுமுக நடிகர் பரபரப்புப் புகார்

இயக்குநர் மிஷ்கின் சைக்கோ படத்தில் தன்னை நடிக்க வைப்பதாக கூறி தன்னிடம் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றியதாக புதுமுக நடிகர் மைத்ரேயா என்பவர் பரபரப்பு குற்றசாட்டை கூறியுள்ளார்.
சமூதாயத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கதையை தனக்கே உரித்தான பாணியில் விசித்திரமான  திரைப்படங்களை இயக்குபவர் மிஷ்கின், இவர் தற்பொழுது நடிகர் உதயநிதி ஸ்டாலினை வைத்து சைக்கோ என்ற படத்தை இயக்கவுள்ளார். திரில்லர் பாணியில் உருவாகவுள்ள இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யாமேனன், அதிதி ராவ், ஹைதரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர், 
 
இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் சைக்கோ படத்தில் தன்னை நடிக்க வைப்பதாக கூறி தன்னிடம் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றியதாக புதுமுக நடிகர் மைத்ரேயா என்பவர் பரபரப்பு குற்றசாட்டை வீடியோவுடன் வெளியிட்டுள்ளார்.   
சைக்கோ படத்தில் என்னை ஹீரோவாக நடிக்கவைக்க என் அப்பா ஒரு மிகப்பெரிய தொகையை முன்பணமாக இயக்குனர் மிஷ்கினிடம் கொடுத்தார். பணம் வாங்கியதும் காலம் கடத்த ஆரம்பித்தார், கேட்கும் பொழுதெல்லாம் நிச்சயமாக நீ தான் ஹீரோ என்று சத்தியம் செய்வார். அதனால் அவர்மீது நானும் ஏன் அப்பாவும்  மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தோம். 
 
ஆனால், கடைசியில் அந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளதாக கேள்விப்பட்டோம் அதைப்பற்றி அவரிடம் கேட்டபோது உன்னை வைத்து படம் எடுக்கமுடியாது, பணத்தையும் உடனடியாக கொடுக்கமுடியாது என கறாராக பதில் அளித்தார் என மைத்ரேயா தெரிவித்துள்ளார்.