1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vm
Last Modified: சனி, 9 மார்ச் 2019 (16:08 IST)

'பாகுபலி-3' எடுத்தால் நடிக்க ஆசை: ஹாலிவுட் நடிகர் விருப்பம்

இந்திய சினிமாவில் பிரம்மாண்டமான படங்களில் முக்கியமானது என்றால் பாகுபலிதான்.




தெலுங்கு, தமிழ்., இந்தியில் நேரடியாக வெளியான இப்படம் இந்தியாவை தாண்டி, சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளில் வெளியானது.  ராஜமெளலி இயக்கிய இப்படத்தில், பிரபாஸ், ராணா டகுபதி, சத்யராஜ், தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
 
தென்னிந்திய சினிமாவான பாகுபலி உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் ரூ.1000 அளவுக்கு வசூலை வாரி குவித்தது.
 
இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் சாமுவேல் ஜாக்சன், 'அவெஞ்சர்ஸ்', 'கேப்டன் மார்வெல்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,  ஏதேனும் பாலிவுட் படத்தில் நடிக்க ஆசை இருக்கிறதா என்ற கேள்விக்கு, "ஆம். 'பாகுபலி-3' எடுத்தால் அதில் நடிக்க விருப்பம் இருக்கிறது" என்றார். மேலும், இந்தியாவுக்கு வந்து ஒரு பாலிவுட் படத்தை எடுக்கவும் ஆசை இருக்கிறது என கூறியுள்ளார்.
 
இதனிடையே பாகுபலி பாலிவுட் படம் இல்லை டோலிவுட் என்று தெலுங்கு ரசிகர்கள் கொந்தளித்து அவரை டேக் செய்து வருகின்றனர். இந்தியா என்றாலே பாலிவுட் தானா, இங்கு டோலிவுட், கோலிவுட் என பல பிராந்திய சினிமாக்கள் இருக்கின்றன என் சாமுவேல் ஜாக்சனை டேக் ய்து பலர் பதிவிட்டு வருகின்றனர்.