வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 18 மே 2020 (22:46 IST)

சென்னையில் 144 தடை உத்தரவு மே.31 வரை நீட்டிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக மூன்றாம் கட்ட பொது ஊரடங்கு மே 17 ஆம் தேதி வரை இருந்த நிலையில், நேற்று மாலை நான்காவது கட்ட பொது ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில்  அதிக பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் பொது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னையில் 144 தடை உத்தரவு மே.31 வரை நீட்டிக்கப்படுவதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

சென்னையில் 144 தடை உத்தரவு மே.31 வரை நீட்டிக்கப்படுகிறது. எனவே,  பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்டோர் கூடவும் தடை விதிக்கபடுகிறது என தெரிவித்துள்ளார்.