வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: புதன், 21 மே 2014 (13:20 IST)

’அழகு ரொம்ப முக்கியம்’

பெரும்பாலான முன்னணி நடிகைகள் திரைப்பட நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யும் மேக்கப் மேன்களிடம்தான் மேக்கப் போட்டுக் கொள்வார்கள். அதனால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. 
‘ஃபெப்சி’ அமைப்பும் தனக்கென பிரத்யேக மேக்கப்மேன்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவிப்பே செய்திருக்கிறது. அதையும் தாண்டி, ’இரண்டாம் உலகம்’ படத்திற்காக தனியாக 
யூனியனில் இல்லாத ஒருவரை மேக்கப்புக்கு வைத்துக் கொண்ட அனுஷ்காவுக்கு ‘ஃபெப்சி அமைப்பு அபராதம் விதித்தது, ஆனால், தற்போது பெரும்பாலான நடிகைகள் பிரத்யேகமாக ஆட்களை வைத்துக் கொள்கிறார்கள். 
முகத்தின் அழகு மிகவும் முக்கியம். அதற்காக தனியாக ஒப்பனை கலைஞரை வைத்துக் கொள்வதில் தப்பில்லை என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இன்னொரு காரணம் நடிகை சமந்தாவுக்கு கோடை காலம் வந்தாலே ’ஸ்கின்’ அலர்ஜியால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். அது போல நமக்கும் வந்துவிடுமோ என்று பயப்படுவதும் தனியாட்களை வைத்துக் கொள்வதற்கு ஒரு முக்கிய காரணமாம்.