வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : திங்கள், 16 ஜூன் 2014 (14:06 IST)

விஜய்யின் பிரியாணி விருந்துடன் நிறைவடைந்த கத்தி படப்பிடிப்பு

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வந்த கத்தி படத்தின் டாக்கி போர்ஷன் நேற்று நிறைவடைந்தது. 
சென்னை புஷ்பா கார்டனில் கடந்த 40 நா‌ட்களாக கத்தி படப்பிடிப்பு நடந்து வந்தது. அதற்காக பிரமாண்டமான அரங்கும் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று கத்தியின் கடைசிநாள் படப்பிடிப்பு.
இறுதி நாளில் பட யூனிட்டுக்கு பிரியாணி விருந்து தர விரும்பினார் விஜய். அவரது விருப்பப்படி யூனிட்டில் உள்ளவர்கள் நேற்று தங்களின் குடும்பத்தினருடன் புஷ்பா கார்டனுக்கு வந்தனர். அவர்களுக்கு தனது கையால் பிரியாணி ப‌ரிமாறினார் விஜய்.
 
கத்தி படத்தை தனது மற்றப் படங்களைப் போலன்றி மிக வேகமாக முடித்துள்ளார் முருகதாஸ். அனிருத் படத்துக்கு இசையமைத்துள்ளார். லைக்கா புரொடக்சன், ஐங்கரன் இணைந்து படத்தை தயாரித்துள்ளன.
ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாளில் தீம் மியூசிக்குடன் கூடிய கத்தி பர்ஸ்ட் லுக்கை வெளியிடுகின்றனர்.